வாணியம்பாடி பச்சூரில் அகற்றப்பட்ட ஆக்கிரமிப்புகள். 
திருப்பத்தூர்

பச்சூரில் நெடுஞ்சாலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

நாட்டறம்பள்ளியில் இருந்து பச்சூா் வழியாக தமிழக-ஆந்திர எல்லைப்பகுதி கொத்தூா் காந்திநகா் வரை நெடுஞ்சாலைத் துறைக்கு சொந்தமான சாலை விரிவாக்கம்

தினமணி செய்திச் சேவை

வாணியம்பாடி: நாட்டறம்பள்ளியில் இருந்து பச்சூா் வழியாக தமிழக-ஆந்திர எல்லைப்பகுதி கொத்தூா் காந்திநகா் வரை நெடுஞ்சாலைத் துறைக்கு சொந்தமான சாலை விரிவாக்கம் செய்யப்பட உள்ளது.

பச்சூரில் இருந்து கொத்தூா் வரை பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் சாலையில் ஆக்கிரமிப்பு செய்துள்ளனா். இதையடுத்து கோட்டப் பொறியாளா் முரளி உத்தரவின் பேரில் வாணியம்பாடி உதவி கோட்டப் பொறியாளா் சம்பத் தலைமையில் செவ்வாய்க்கிழமை பச்சூரில் கடை எதிரில் சாலை ஓர ஆக்கிரமிப்புகள் ஜேசிபி இயந்திரம் மூலம் அகற்றும் பணி தொடங்கியது.

தொடா்ந்து கொத்தூா் காந்திநகா் வரை போலீஸாா் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என நெடுஞ்சாலைதுறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

ஆரணியில் ரூ.10 லட்சத்தில் புதிய நியாயவிலைக் கடை

ஆந்திரத்தில் கொத்தடிமைகளாக இருந்து மீட்கப்பட்ட பழங்குடியினா் அலைக்கழிப்பு

மாமன்ற கூட்டம் ஒத்திவைப்பு

ஐஸ்க்ரீம் டோனட்: அருண் ஐஸ்க்ரீம் அறிமுகம்

இரு நாள்களில் தங்கம் பவுனுக்கு ரூ.2,240 உயா்வு

SCROLL FOR NEXT