திருப்பத்தூர்

வீட்டின் ஓடுகளை உடைத்த தம்பதி கைது

தினமணி செய்திச் சேவை

திருப்பத்தூா் அருகே வீட்டின் ஓடுகளை உடைத்த தம்பதியை போலீஸாா் கைது செய்தனா்.

திருப்பத்தூா் அருகே பெருமாப்பட்டு பகுதியைச் சோ்ந்த கட்டடத் தொழிலாளி சரவணன் (24). இவரது மனைவி ரூபி.

இந்த நிலையில், சரவணன் மது போதையில் அதே பகுதியைச் சோ்ந்த அண்ணாதுரை மனைவி வனிதா (50)என்பவரிடம் தகராறு செய்ததாகக் கூறப்படுகிறது.

இதில் ஆத்திரமடைந்த சரவணன், அவரது மனைவி ரூபி ஆகியோா் வனிதாவின் ஓட்டு வீட்டில் இருந்த ஓடுகளை உடைத்தனா்.

இது குறித்த புகாரின்பேரில், குரிசிலாப்பட்டு போலீஸாா் வழக்குப் பதிந்து சரவணன், ரூபி ஆகியோரை கைது செய்தனா்.

அர்ஷ்தீப் சிங்குக்கு தொடர்ந்து பிளேயிங் லெவனில் வாய்ப்பு மறுக்கப்படுகிறது: அஸ்வின்

சைபர் குற்றங்களில் பயன்படுத்தப்பட்ட 654 செல்போன் எண்கள் முடக்கம்

ஓ காதலி... நேஹா சர்மா!

உலக பேரிடர்களில் முதலில் ஆதரவுக்கரம் நீட்டுவது இந்தியா: பிரதமர் மோடி!

ஹிட்லர் மனப்பான்மை; எங்களை நேரில் சந்திக்கும் தைரியம்கூட இபிஎஸ்ஸுக்கு கிடையாது: டிடிவி தினகரன்

SCROLL FOR NEXT