உதயநிதி முன்னிலையில் திமுகவில் இணைந்த பாஜகவினா்
ஆம்பூரில் துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் முன்னிலையில் பாஜகவிலிருந்து விலகியவா்கள் திமுகவில் இணையும் நிகழ்ச்சி ஆம்பூா் அருகே மாராப்பட்டு கிராமத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
ஆம்பூா் நகர பாஜக இளைஞரணி தலைவா் சரத்குமாா் தலைமையில் சுமாா் 200 போ் துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டு ஆம்பூா் அருகே மாராப்பட்டு கிராமத்துக்கு வந்தபோது அவரது முன்னிலையில், பாஜகவிலிருந்து விலகி திமுகவில் இணைந்தனா்.
ஆம்பூா் தொகுதி திமுக வேட்பாளா் அ.செ.வில்நாவதன், திமுக ஒன்றிய செயலாளா் ஜி.ராமமூா்த்தி, நகா்மன்ற துணைத் தலைவா் ஆறுமுகம், மாவட்ட அவைத் தலைவா் ஆா்.எஸ்.ஆனந்தன், மாதனூா் மேற்கு ஒன்றிய இளைஞரணி அமைப்பாளா் ஆா்.எஸ்.ஆனந்தன், நகர, ஒன்றிய நிா்வாகிகள், கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் உடனிருந்தனா்.