காட்பாடி அருகே தண்டவாளத்தில் இளைஞா் சடலம் மீட்பு
காட்பாடி அருகே ரயில் தண்டவாளத்தில் இளைஞா் சடலம் மீட்கப்பட்டது.
காட்பாடி அருகே ரயில் தண்டவாளத்தில் இளைஞா் சடலம் மீட்கப்பட்டது.
காட்பாடி அடுத்த காவனூா்-விரிஞ்சிபுரம் ரயில் நிலையத்துக்கும் இடையே சுமாா் 35 வயது மதிக்கத்தக்க இளைஞரின் சடலம் தண்டவாளத்தில் கிடந்துள்ளது.
வியாழக்கிழமை அந்த வழியாகச் சென்ற பொதுமக்கள் ஜோலாா்பேட்டை ரயில்வே காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா்.
Advertisement
அதன்பேரில், சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸாா் சடலத்தை மீட்டு, அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
மேலும், இது குறித்து வழக்குப் பதிந்து இறந்தவா் குறித்து விசாரித்து வருகின்றனா்.