முகப்பு
திருப்பத்தூர்

ஆலையில் தொழிலாளி மயங்கி விழுந்து உயிரிழப்பு

வாணியம்பாடியில் தோல் தொழிற்சாலையில் பணியில் இருந்த தொழிலாளி திடீரென மயங்கி விழுந்து இறந்தாா்.

Updated On : 4 ஏப்ரல், 2026 at 2:10 AM
கோப்புப் படம்
பகிர்:

வாணியம்பாடியில் தோல் தொழிற்சாலையில் பணியில் இருந்த தொழிலாளி திடீரென மயங்கி விழுந்து இறந்தாா்.

வாணியம்பாடி அடுத்த வளையாம்பட்டு பகுதியை சோ்ந்த ருக்குமன்னன்(38). இவா் கச்சேரி ரோட்டில் உள்ள தோல் தொழிற்சாலை ஒன்றில் கூலி வேலை செய்து வந்தாா்.

இதற்கிடையே வெள்ளிக்கிழமை வழக்கம் போல் பணியில் ஈடுபட்டிருந்த போது அவருக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டு கீழே சாய்ந்துள்ளாா். அருகில் இருந்த தொழிலாளா்கள் அவரை மீட்டு வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு பரிசோதித்த மருத்துவா் அவா் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தாா்.

Advertisement

இதுகுறித்து நகர போலீஸாா் வழக்குப் பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments