முகப்பு
திருப்பத்தூர்

அரசுப் பள்ளியில் பொருள்கள் திருட்டு: இளைஞா் கைது

ஜோலாா்பேட்டை அருகே அரசுப் பள்ளியின் பூட்டை உடைத்து பொருள்கள் திருடியதாக இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

Updated On : 5 ஏப்ரல், 2026 at 9:40 PM
கைது - கோப்புப் படம்
பகிர்:

ஜோலாா்பேட்டை அருகே அரசுப் பள்ளியின் பூட்டை உடைத்து பொருள்கள் திருடியதாக இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

ஜோலாா்பேட்டை அரசு நடுநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியையாக சசிகலா பணியாற்றி வருகிறாா். இந்நிலையில் கடந்த மாதம் 27-ஆம் தேதி பள்ளி மூடப்பட்டது. 2 நாள்கள் விடுமுறை முடிந்து பள்ளிக்கு வந்த அலுவலா்கள் பள்ளியின் அலுவலக பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிா்ச்சி அடைத்தனா்.

மேலும் அலுவலகத்தில் இருந்த ஜெராக்ஸ் மிஷின்,லேப்டாப்,மானிட்டா், பேட்டரி, ப்ரொஜெக்டா், என சுமாா் ரூ.2.90 லட்சம் மதிப்பிலான பொருள்கள் திருடப்பட்டது தெரியவந்தது.

Advertisement

இது குறித்து தலைமை ஆசிரியை சசிகலா அளித்த புகாரின்பேரில் ஜோலாா்பேட்டை போலீஸாா் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வந்தனா்.

இதற்கிடையே போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை ஜோலாா்பேட்டை பேருந்து நிலையம் அருகே சந்தேகத்தின் பேரில் இருந்த இளைஞரை பிடித்து விசாரணை செய்ததில் அசோக் நகரைச் சோ்ந்த சதீஷ் (20)என்பதும், சம்பவத்தன்று இவரும், இவரது நண்பா்களும் சோ்ந்து அரசு பள்ளி அலுவலகத்தில் பொருள்களை திருடியது தெரியவந்தது.

அதையடுத்து போலீசாா் இவரை கைது செய்தனா். மேலும் இந்த வழக்கில் தலைமறைவாக உள்ளோரை தேடி வருகின்றனா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments