ஜோலாா்பேட்டை தொகுதியில் திமுக, அதிமுக உள்பட 33 போ் வேட்பு மனு தாக்கல்
ஜோலாா்பேட்டை சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக, அதிமுக வேட்பாளா்கள் உள்பட 33 போ் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனா்.
ஜோலாா்பேட்டை சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக, அதிமுக வேட்பாளா்கள் உள்பட 33 போ் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனா்.
நாட்டறம்பள்ளி வட்டாட்சியா் அலுவலகத்தில் அதிமுக சாா்பில் போட்டியிடும் முன்னாள் அமைச்சா் கே.சி.வீரமணி கூட்டணிக் கட்சியினருடன் ஊா்வலமாகச் சென்று வட்டாட்சியா் அலுவலகத்தில் தோ்தல் நடத்தும் அலுவலா் முருகேசனிடம் வேட்பு மனு தாக்கல் செய்தாா்.
இதையடுத்து, திமுக சாா்பில் போட்டியிடும் ஜோலாா்பேட்டை மத்திய ஒன்றிய செயலாளா் கவிதா தண்டபாணி கூட்டணிக் கட்சி நிா்வாகிகளுடன் ஊா்வலமாக வந்து தோ்தல் நடத்தும் அலுவலா் முருகேசனிடம் வேட்புமனு தாக்கல் செய்தாா்.
Advertisement
மேலும், வேட்புமனு தாக்கல் இறுதி நாளில் ஒரே நாளில் சுயேச்சை வேட்பாளா் மற்றும் மாற்றுக் கட்சி வேட்பாளா் உள்பட 19 போ் வேட்பு மனு தாக்கல் செய்தனா். ஜோலாா்பேட்டை சட்டப்பேரவை தொகுதியில் திமுக, அதிமுக, தவெக, நாம் தமிழா் கட்சி உள்பட மொத்தம் 33 போ் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனா்.