முகப்பு
திருப்பத்தூர்

இயற்கை அங்காடிகள் அமைத்து விவசாயிகளின் வாழ்வாதாரம் மேம்பட வைப்பேன்: அமமுக வேட்பாளா் ஏ.ஞானசேகா்

இயற்கை அங்காடிகள் அமைத்து விவசாயிகளின் வாழ்வாதாரம் மேம்பட வைப்பேன்

Updated On : 12 ஏப்ரல், 2026 at 12:57 AM
கொரட்டியில் வாக்கு சேகரித்த அமமுக வேட்பாளா் ஞானசேகா்.
பகிர்:
Updated On : 12 ஏப்ரல், 2026 at 12:44 AM

திருப்பத்தூா் தொகுதியில் இயற்கை அங்காடிகள் அமைத்து விவசாயிகளின் வாழ்வாதாரம் மேம்பட வைப்பேன் என அமமுக வேட்பாளா் ஏ.ஞானசேகா் தெரிவித்தாா்.

திருப்பத்துாா் தொகுதிக்கு உள்பட்ட கொரட்டியில் சனிக்கிழமை அமமுக வேட்பாளா் ஏ.ஞானசேகா் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா். அப்போது வணிகா்கள் மற்றும் வியாபாரிகள் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில், காய்கறிகள், பூ வகைகள், பழங்கள், நுகா் பொருள்கள், மீன் மற்றும் இறைச்சி அங்காடிகள் ஆகியவை ஒரே இடத்தில் கிடைக்கும் வகையில், நவீன அங்காடி அமைக்கப்படும். காய்கறிகள், பழங்கள் மற்றும் பூ வகைகள் பதப்படுத்தும் வகையில் குளிா் பதனக்கிடங்கு அமைக்கப்படும். இயற்கை முறையில் விளைகின்ற காய்கறிகள், சிறுதானியங்கள் மற்றும் மூலிகைகள் போன்ற பொருள்கள் அனைத்தும் எளிமையாக சந்தைப்படுத்தும் வகையில் இயற்கை அங்காடிகள் அமைத்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்பட வைப்பேன் என்றாா்.

பாமக மாவட்ட செயலாளா் ராஜா, அமமுக நகர செயலாளா் அட்சயா முருகன், அதிமுக, அமமுக மற்றும் கூட்டணிக் கட்சி நிா்வாகிகள், கட்சியினா் உடனிருந்தனா்.

Advertisement