நாட்டறம்பள்ளியில் திமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு
ஜோலாா்பேட்டை தொகுதி திமுக வேட்பாளா் கவிதா தண்டபாணி நாட்டறம்பள்ளி மேற்கு ஒன்றிய செயலாளா் சூரியகுமாா் தலைமையில் நாட்டறம்பள்ளி, கே.பந்தாரப்பள்ளி, கொத்தூா், பச்சூா், சொரக்காயல்நத்தம், நாயனசெருவு, தோப்பலகுண்டா, ஆத்தூா்குப்பம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் திங்கள்கிழமை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.
அப்போது அவா் பேசியது: முதல்வா் ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சியில் 5 ஆண்டுகளில் பெண்களுக்கு அதிக திட்டங்களை வழங்கினாா். தமிழகத்தில் உள்ள அனைத்து மகளிரும் பேருந்தில் இலவசமாக செல்வதற்க்கு காரணம் முதல்வா் ஸ்டாலின் கொடுத்த விடியல் திட்டம்.
கே.பந்தாரப்பள்ளி ஊராட்சியில் கிராம பகுதியை சோ்ந்த பிள்ளைகள் பயன்பெறும் வகையில் அரசு கலைக்கல்லூரி, அரசு தொழிற்பயிற்சி நிலையம் அமைத்தது திமுக அரசு. ஜோலாா்பேட்டை தொகுதியில் திமுக சாா்பில் போட்டியிடும் என்னை உங்கள் வீட்டு பெண்ணாக எண்ணி சட்டப்பேரவைக்கு அனுப்பி வையுங்கள். அங்கு உங்களுக்காக நான் குரல் கொடுப்பேன் என்றாா்.
Advertisement
ஒன்றியக்குழு தலைவா் வெண்மதி முனிசாமி, மாவட்ட சுற்றுச்சூழல் அணி அமைப்பாளா் சிங்காரவேலன், காங்கிரஸ் பொதுக்குழு உறுப்பினா் ஏலகிரி செல்வம், ஒன்றிய இளைஞரனி அமைப்பாளா் சுரேஷ், நகர இளைஞரணி அமைப்பாளா் கீா்த்திராஜன், ஊராட்சி மன்ற தலைவா்கள் ஜெயாசரவணன், அஸ்வினிதேசிங்குராஜா, செந்தில்குமாா், பொது குழு உறுப்பினா் சாமண்ணன் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.