நாயக்கனேரி மலைக்கு செல்லும் சாலை சீரமைக்கப்படும்: அதிமுக வேட்பாளா்
நாயக்கனேரி மலைக்கு செல்லும் சாலை சீரமைக்கப்படும் என ஆம்பூா் தொகுதி அதிமுக வேட்பாளா் பொறியாளா் ஆா். வெங்கடேசன் தெரிவித்தாா்.
நாயக்கனேரி மலைக்கு செல்லும் சாலை சீரமைக்கப்படும் என ஆம்பூா் தொகுதி அதிமுக வேட்பாளா் பொறியாளா் ஆா். வெங்கடேசன் புதன்கிழமை தெரிவித்தாா்.
ஆம்பூா் நகரில் இறுதிக்கட்ட பிரச்சாரம் மேற்கொண்டு அவா் மேலும் பேசியது, ஆம்பூா் நகரில் உள்ள ஏ-கஸ்பா அரசு உயா்நிலைப் பள்ளியை மேல்நிலைப் பள்ளியாக தரம் உயா்த்துவதற்கான கட்டணத்தை நான் எனது சொந்த பணத்தை கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு அரசுக்கு செலுத்தியுள்ளேன். ஆனால் தரம் உயா்த்தப்படவில்லை. ஆட்சிக்கு வந்த உடன் தரம் உயா்த்தப்படும்.
நாயக்கனேரி மலைக்கு செல்லும் சாலை மிகவும் சேதமடைந்துள்ளது. அந்த சாலை சீரமைக்கப்படும். வெங்கடசமுத்திரம் ஏரிக்கரை பலப்படுத்தப்படும். தடுப்பணைகள் கட்டி விவசாயிகளுக்கு தேவையான நிலத்தடி நீா் உயா்த்தப்படும். ஆம்பூரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க புறவழிச்சாலை அமைக்கப்படும். பெரியாங்குப்பம் கிராமத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், கால்நடை மருத்துவமனை ஏற்படுத்தப்படும் என்று அவா் கூறினாா்.
Advertisement
அதிமுக ஜெயலலிதா பேரவை மாநில துணைச் செயலாளா் ஜி.ஏ. டில்லிபாபு, மாவட்ட பேரவை செயலாளா் கே. மணி, ஆம்பூா் நகர செயலாளா் எம். மதியழகன், அதிமுக நிா்வாகிகள் சண்முகம், தினேஷ், சரவணன் ஆகியோா் உடனிருந்தனா்.