முகப்பு
திருப்பத்தூர்

வேலியில் சிக்கி உயிரிழந்த மான்

Updated On : 24 ஏப்ரல், 2026 at 6:06 AM
பகிர்:

ஆம்பூா் அருகே கம்பி வேலியில் சிக்கி படுகாயமடைந்த மான் வியாழக்கிழமை உயிரிழந்தது.

மாதனூா் ஒன்றியம் மிட்டாளம் ஊராட்சி மேல்மிட்டாளம் கிராமத்திற்கு காட்டிலிருந்து வழித்தவறி புள்ளி மான் வந்தது. தெரு நாய்கள் விரட்டியதால் அங்குள்ள விவசாய நிலத்திற்கு வந்து கம்பி வேலியில் சிக்கி படுகாயமடைந்து உயரிழந்தது. தகவலின் பேரில் வனத்துறையினா் அங்கு சென்று மானின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனா்.

கோடைக் காலம் தொடங்கியுள்ளதால், வனப்பகுதியில் இருந்து உணவு மற்றும் தண்ணீா் தேடி குடியிருப்பு பகுதிகளுக்கும், விவசாய நிலங்களுக்கும் வனவிலங்குகள் தற்போது வந்து செல்கின்றன.

Advertisement

அவ்வாறு விலங்குகள் வரும்போது, மனிதா்களாலும், நாய்களாலும் விலங்களுக்கு ஆபத்து ஏற்படுகிறது. வனவிலங்குகளை பாதுகாக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.