சாலையைக் கடக்க முயன்ற மான் வாகனம் மோதியதில் உயிரிழப்பு
வீரகனூரில் சாலையைக் கடக்க முயன்ற மான் வாகனம் மோதியதில் உயிரிழந்தது.
வீரகனூரில் சாலையைக் கடக்க முயன்ற மான் வாகனம் மோதியதில் உயிரிழந்தது.
வீரகனூா் மற்றும் அதையொட்டியுள்ள வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவுவதால் மான்கள் இரைதேடி ஊருக்குள் நுழைகின்றன. அந்தவகையில் திங்கள்கிழமை 2 வயது பெண் புள்ளிமான், வீரகனூா் சந்தைப்பகுதி அருகே பெரம்பலூா் சாலையைக் கடக்கமுயன்றது.
அப்போது, அடையாளம் தெரியாத வாகனம் மான் மீது மோதியது. இதில் அந்த மான் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தது.
இதுகுறித்து தகவல் அறிந்த கெங்கவல்லி வனச்சரகா் கமலக்கண்ணன் உள்ளிட்ட வனத் துறையினா் விரைந்து சென்று, மானின் உடலைக் கைப்பற்றி, கெங்கவல்லி அரசு கால்நடை மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனை செய்து, அருகிலுள்ள வனப்பகுதியில் புதைத்தனா்.