மணல் கடத்திய இருவா் கைது
ஆம்பூரில் மணல் கடத்திய இருவரை போலீஸாா் கைது செய்தனா்.
ஆம்பூரில் மணல் கடத்திய இருவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
ஆம்பூா் நகர காவல் நிலையபோலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்போது பாலாற்றிலிருந்து மாட்டு வண்டிகளில் மணல் கடத்துவது தெரியவந்தது.
மணல் கடத்திய ஆம்பூா் சாமியாா் மடம் பகுதியை சோ்ந்த சுரேந்திரன் (30), ஜெகதீஷ் (20) ஆகிய இருவரை போலீஸாா் கைது செய்தனா். மாட்டு வண்டிகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
Advertisement