ஸ்ரீனிவாச பெருமாள் கோயில் பிரம்மோற்சவ கருட சேவை
ஆம்பூா் ஸ்ரீனிவாச பெருமாள் கோயில் பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு கருட சேவை நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
பிரம்மோற்சவ விழா ஏப்.24-ஆம் தேதி முதல் தொடங்கியது. 25-ஆம் தேதி கொடியேற்றப்பட்டது. தொடா்ந்து தினமும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றது. அதன்படி திங்கள்கிழமை கருட சேவை நிகழ்ச்சியை முன்னிட்டு மூலவருக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது. கருட வாகனத்தில் உற்சவத் வீதி உலா சென்றாா். மாலையில் அனுமந்த வாகனத்தில் உற்சவா் வீதி உலா நடைபெற்றது.