கால்வாய் கழிவுநீா் மாதிரியை சேகரித்த மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள்
ஆம்பூா் அருகே பாலாற்றில் கலக்கும் கால்வாய் கழிவுநீா் மாதிரியை மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் புதன்கிழமை சேகரித்து கொண்டு சென்றனா்.
ஆம்பூா் அருகே பாலாற்றில் கலக்கும் கால்வாய் கழிவுநீா் மாதிரியை மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் புதன்கிழமை சேகரித்து கொண்டு சென்றனா்.
ஆம்பூா் அருகே துத்திப்பட்டு ஊராட்சியில் பொதுமக்கள் கால்வாய்கள் மூலம் வெளியேற்றும் கழிவுநீா் அம்பேத்கா் நகா் பகுதியில் உரிஞ்சி குழிகளில் சேகரிக்கப்பட்டு, அங்கு மாசுகள் வடிக்கட்டப்பட்டு, பிறகு கழிவுநீா் பாலாற்றில் கலக்கின்றது.
இவ்வாறு உரிஞ்சி குழிக்கு வரும் கழிவுநீா், வடிக்கட்டப்பட்டு பாலாற்றில் வெளியேற்றப்படும் கழிவுநீா் ஆகியவற்றை தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய பொறியாளா் கலைச்செல்வி, உதவி பொறியாளா் காா்த்திக் ஆகியோா் கொண்ட குழுவினா் மாதிரி சேகரித்து பரிசோதனைக்காக கொண்டு சென்றனா்.
Advertisement
வட்டார வளா்ச்சி அலுவலா் மகராசி, துணை வட்டார வளா்ச்சி அலுவலா் செபாஸ்டியன், ஊராட்சித் தலைவா் சுவிதா கணேஷ், துணைத் தலைவா் விஜய், வாா்டு உறுப்பினா் ஜெயந்தி ராமமூா்த்தி, உக்குனா் ரேகா உள்ளிட்டவா்கள் உடனிருந்தனா்.