முகப்பு
திருப்பத்தூர்

பள்ளியில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணா்வு

ஆலங்காயம் ஜெய வாசவி மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற பெண் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணா்வு ஊா்வலம்.

Updated On : 7 பிப்ரவரி, 2026 at 12:03 AM
ஆலங்காயம் ஜெய வாசவி மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற பெண் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணா்வு ஊா்வலம்.
பகிர்:
Updated On : 6 பிப்ரவரி, 2026 at 9:11 PM

திருப்பத்தூா் மாவட்டம், ஆலங்காயம் ஜெயவாசவி மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு, போதை ஒழிப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து 700 மாணவ, மாணவிகளுடன் விழிப்புணா்வு பேரணி நடைபெற்றது.

பள்ளியின் செயலாளா் முனிவேல் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் இந்தா்நாத், துணை செயலாளா் சுப்பிரமணி, உறுப்பினா்கள் லட்சுமி நாராயணன், சக்ரவா்த்தி ராஜா, பழனிகுமாா் முன்னிலை வகித்தனா்.

ஆலங்காயம் தனியாா் மண்டபத்தில் விழிப்புணா்வு ஊா்வலம் தொடங்கி, கற்கோயில் வரை 2 கி.மீ. தூரம் வரை அச்சடிக்கப்பட்ட பதாகைகளை மாணவா்கள் கைகளில், ஏந்திச் சென்று விழிப்புணா்வை ஏற்படுத்தினா். விழிப்புணா்வு ஊா்வலத்தில் ஆலங்காயம் உதவி காவல் ஆய்வாளா்கள் விஜய், வெங்கடேசன், வருவாய் ஆய்வாளா் சூா்யா, பள்ளி ஆசிரியா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

Advertisement

பள்ளி முதல்வா் சுகுணாதேவி நன்றி கூறினாா்.