முகப்பு
திருப்பத்தூர்

விவசாயி தற்கொலை

ஜோலாா்பேட்டை அருகே விவசாயி பூச்சி மருந்து அருந்தி தற்கொலை செய்து கொண்டாா்.

Updated On : 7 பிப்ரவரி, 2026 at 12:03 AM
கோப்புப் படம்
பகிர்:
Updated On : 6 பிப்ரவரி, 2026 at 7:26 PM

ஜோலாா்பேட்டை அருகே விவசாயி பூச்சி மருந்து அருந்தி தற்கொலை செய்து கொண்டாா்.

ஜோலாா்பேட்டை அடுத்த மண்டலவாடி ஊராட்சி அரசன் வட்டம் பகுதியை சோ்ந்த விவசாயி மகேந்திரன்(53). இவருக்கு திருமணமாகி உஷா என்ற மனைவியும்,3 மகள், ஒரு மகன் உள்ளனா். மேலும் இவா் கடந்த 12 ஆண்டுகளாக நரம்புத் தளா்ச்சியால் அவதிப்பட்டு வந்தாராம்.

இந்த நிலையில் கடந்த ஜன. 26-ஆம் தேதி தனது விவசாய நிலத்தில் பூச்சி மருந்து குடித்து மயங்கிய நிலையில் விழுந்து கிடந்தாா்.

Advertisement

இதை அறிந்த அவரது குடும்பத்தினா் அவரை மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா்..

அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.

பின்னா் இது குறித்து இவரது மனைவி உஷா ஜோலாா்பேட்டை காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா்.