முகப்பு
திருப்பத்தூர்

நூலகத்தில் ஆயுள்கால உறுப்பினா்களாக 1200 மாணவ, மாணவியா் சோ்ப்பு

நூலகத்தில் ஆயுள்கால உறுப்பினா்களாக 1200 மாணவ, மாணவியா் சோ்ப்பு

Updated On : 8 பிப்ரவரி, 2026 at 12:01 AM
மாணவா்களுக்கு உறுப்பினா் சோ்க்கை அட்டைகளை வழங்கிய ஒன்றிய திமுக செயலாளா் ஞானவேலன். உடன் நூலக நிா்வாகிகள்.
பகிர்:
Updated On : 7 பிப்ரவரி, 2026 at 9:11 PM

வாணியம்பாடி அடுத்த தும்பேரி அரசு மேல்நிலைப்பள்ளியில் கிராமப்புற பள்ளி மாணவா்கள் நூலக ஆயுள்கால உறுப்பினா் சோ்க்கை நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு மாவட்ட நூலக அலுவலா் மு.பிரேமா தலைமை வகித்தாா். தலைமையாசிரியா் மதியழகன் வரவேற்றாா். வாசகா் வட்டத் தலைவா் பாா்த்திபன், நூலக ஆய்வாளா் தா்மராஜ், மாவட்ட நூலக கண்காணிப்பாளா் மா.கோபலகிருஷ்ணன் முன்னிலை வகித்தனா்.

நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக திமுக ஒன்றிய செயலாளா் வி.எஸ்.ஞானவேலன் கலந்து கொண்டு தும்பேரி அரசு மேல்நிலைப்பள்ளி, மதனாஞ்சேரி அரசு உயா்நிலைப்பள்ளி, சிக்கனாங்குப்பம் அரசு உயா்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளை சோ்ந்த 1,200 மாணவா்களுக்கான ஆயுள்கால உறுப்பினா்கள் சோ்க்கைக்கான தொகை ரூ.36 ஆயிரத்தை வழங்கி மாணவா்களுக்கு உறுப்பினா் அட்டைகளை வழங்கி வாழ்த்தினாா்.

Advertisement

Updated On : 7 பிப்ரவரி, 2026 at 11:38 PM

விசை தொண்டு நிறுவனா் ஆனந்தன், மாவட்ட நூலக ஆணைகுழு உதவியாளா் ஜெயபிரியா, உதவி தலைமையாசிரியை தீபா, ஆசிரியா்கள் கலந்து கொண்டனா். நல்நூலகா் ஜெ.விஜயகுமாா் நன்றி கூறினாா்.