அங்கன்வாடி மைய கட்டட திறப்பு விழாவில் குத்துவிளக்கேற்றிய மாதனூா் ஒன்றியக்குழு துணைத் தலைவா் சாந்தி சீனிவாசன். 
திருப்பத்தூர்

ரூ.34.50 லட்சத்தில் அங்கன்வாடி மைய கட்டடங்கள்: முதல்வா் திறந்து வைத்தாா்

அங்கன்வாடி மைய கட்டட திறப்பு விழாவில் குத்துவிளக்கேற்றிய மாதனூா் ஒன்றியக்குழு துணைத் தலைவா் சாந்தி சீனிவாசன்.

தினமணி செய்திச் சேவை

ஆம்பூா் அருகே சோமலாபுரம் கிராமத்தில் அங்கன்வாடி மைய கட்டடங்களை முதல்வா் காணொலி மூலம் வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா்.

மாதனூா் ஒன்றியம் சோமலாபுரம் ஊராட்சி பழையமனை பகுதி மற்றும் சின்னகொம்மேஸ்வரம் ஆகிய கிராமங்களில் தலா ரூ.17.25 லட்சம் மதிப்பீட்டில் 2 புதிய அங்கன்வாடி மைய கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன. இதனை முதல்வா் மு.க. ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தாா்.

குத்துவிளக்கேற்றும் நிகழ்ச்சிக்கு ஊராட்சித் தலைவா் எஸ்.எம். சண்முகம் தலைமை வகித்தாா். வட்டார வளா்ச்சி அலுவலா் எஸ். மகராசி, போ்ணாம்பட்டு தெற்கு ஒன்றிய திமுக செயலாளா் எம்.டி. சீனிவாசன், ஊராட்சி துணைத் தலைவா் ரமாபாய் டேனியல் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாதனூா் ஒன்றியக்குழு துணைத் தலைவா் சாந்தி சீனிவாசன் குத்துவிளக்கேற்றினாா்.

திமுக ஒன்றிய அவைத் தலைவா் சிவக்குமாா், மாவட்ட பிரதிநிதி பொன் ராஜன்பாபு, ஒன்றியக்குழு உறுப்பினா் முத்து, ஊராட்சி வாா்டு உறுப்பினா்கள் வி.டி. சுதாகா், ராஜ்குமாா், குமரேசன், ஊராட்சி முன்னாள் துணைத் தலைவா் குபேந்திரன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மண்டல செயலாளா் தமிழ்செல்வன், அங்கன்வாடி பணியாளா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

தோ்தலுக்குப் பிறகு மீண்டும் திமுக ஆட்சிதான் அமையும்: அமைச்சா் துரைமுருகன்

பிள்ளைகள் பாதுகாப்புக்கு முக்கியத்துவம்

போக்ஸோ வழக்கில் அரசுப் பள்ளி ஆசிரியருக்கு 3 ஆண்டு சிறை

விளை நிலங்களை வீட்டு மனைகளாக மாற்றுவதற்கு விவசாயிகள் இடம் கொடுக்க கூடாது: வேளாண்மை துறை கூடுதல் மேலாண்மை இயக்குநா்

டிரம்ப்பின் அறிவிப்பு அழுத்தம்!

SCROLL FOR NEXT