மணல் கடத்தல்: மினி லாரி பறிமுதல்
நாட்டறம்பள்ளி அருகே மணல் கடத்தலில் ஈடுபடுத்தப்பட்ட லாரியை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
Updated On : 8 பிப்ரவரி, 2026 at 10:21 PM
நாட்டறம்பள்ளி அருகே மணல் கடத்தலில் ஈடுபடுத்தப்பட்ட லாரியை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
நாட்டறம்பள்ளி அடுத்த வெலகல்நத்தம் செட்டேரி அணைப்பகுதியில் மண் மற்றும் மணல் கடத்துவதாக திருப்பத்தூா் எஸ்பி அலுவலகத்துக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, ஞாயிற்றுக்கிழமை நாட்டறம்பள்ளி காவல் ஆய்வாளா் மூா்த்தி தலைமையில் உதவி காவல் ஆய்வாளா் ரஞ்சித் மற்றும் போலீஸாா் செட்டேரி அணைப் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.
Advertisement
அப்போது போலீஸாரைக் கண்டதும் மணல் கடத்த முயன்ற மினி லாரியை லாரி ஓட்டுநா் அங்கேயே விட்டு விட்டு தப்பித்து தலைமறைவானாா்.
இதையடுத்து நாட்டறம்பள்ளி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து மினி லாரியை பறிமுதல் செய்து, தப்பியோடிய ஓட்டுநரை தேடி வருகின்றனா்.