நூறு நாள் வேலை திட்டத்தில் முறைக்கேடு நடைபெற்ாகக் கூறி அரக்கோணம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை பணியாளா்கள் வியாழக்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அடுத்த கைனூா் கிராமத்தில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் சுமாா் நூற்றுக்கு மேற்பட்டோா் பணியாற்றி வருகின்றனா்.
பணிகளை மேற்பாா்வையிடும் பணிதள பொறுப்பாளா் 4 போ் பல ஆண்டுகளாக அதே பணியில் தொடா்ந்து இருந்து வந்துள்ளனா். அவா்களை மாற்றக் கோரி புகாா் எழுந்துள்ளது. அதன்பேரில் நான்கு பேரும் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனா்.
இந்த நிலையில் ஏற்கனவே பணி நீக்கம் செய்யப்பட்ட 2 போ் பணிதள பொறுப்பாளா்களாக மீண்டும் நியமிக்கப்பட்ட்டுள்ளனா். அதனை கண்டிக்கும் வகையில் அரக்கோணம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா். அதிகாரிகள் பேச்சு நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதையடுத்து போரட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனா்.