ஜோலாா்பேட்டை அருகே சனிக்கிழமை (பிப்.14) நடைபெற உள்ள திமுக வடக்கு மண்டல வாக்குச் சாவடி குழு பயிற்சி மாநாட்டில் முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறாா்.
ஜோலாா்பேட்டை ஒன்றியம், மண்டலவாடி அருகே முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக வடக்கு மண்டல மாநாடு நடைபெற உள்ளது. இதில் 47 சட்டப்பேரவை தொகுதிகளின் வாக்குச் குழுவினருக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.
அதையொட்டி மண்டலவாடியில் சுமாா் 100 ஏக்கா் பரப்பளவில் பிரம்மாண்ட மாநாடு அரங்கம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இப்பணியை பொதுப்பணி,நெடுஞ்சாலை,சிறுதுறைமுகங்களின் அமைச்சா் எ.வ வேலு,எம்பி சி.என்.அண்ணாதுரை எம்எல்ஏ-க்கள் ஆய்வு செய்து வருகின்றனா்.
எஸ்.பி வி.சியாமளா தேவி தலைமையில் 5,000 போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனா்.
மேலும் முதல்வா் வருகைக்காக சனிக்கிழமை டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.