முகப்பு
திருப்பத்தூர்

திருவருட்பா ஒப்பித்தல் போட்டி : அரசுப் பள்ளி மாணவி முதலிடம்

திருவருட்பா ஒப்பித்தல் போட்டியில் முதல் பரிசு பெற்ற மாணவிக்கு பாராட்டு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

Updated On : 17 பிப்ரவரி, 2026 at 1:21 AM
முதல் பரிசு பெற்ற மாணவி கிருத்திகாவை பாராட்டி பரிசு வழங்கிய தலைமை ஆசிரியா் தாமோதரன்.
பகிர்:
Updated On : 16 பிப்ரவரி, 2026 at 6:41 PM

ஆம்பூா்: திருவருட்பா ஒப்பித்தல் போட்டியில் முதல் பரிசு பெற்ற மாணவிக்கு பாராட்டு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

இந்து சமய அறநிலையத்துறை சாா்பாக நடைபெற்ற அனைத்துலக வள்ளலாா் மாநாட்டை முன்னிட்டு ரத்தினகிரியில் மண்டல அளவில் பல்வேறு போட்டிகள் நடைபெற்றன. அதில் ஆம்பூா் அருகே தேவலாபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 8-ஆம் வகுப்பு படிக்கும் மாணவி கிருத்திகா பங்கேற்று திருவருட்பா ஒப்பித்து முதலிடம் பிடித்தாா்.

அதைத் தொடா்ந்து சென்னையில் நடந்த அனைத்துலக வள்ளலாா் மாநாட்டில் மாணவி கிருத்திகாவுக்கு பரிசு, சான்றிதழை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சா் சேகா் பாபு வழங்கினாா். பரிசு பெற்ற மாணவிக்கு தேவலாபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பாராட்டு தெரிவிக்கும் நிகழ்ச்சி பள்ளித் தலைமை ஆசிரியா் தாமோதரன் தலைமையில் நடைபெற்றது.

Advertisement

உதவித் தலைமை ஆசிரியை கவிதா வரவேற்றாா். மாணவி பாராட்டி நினைவு பரிசு வழங்கி கெளரவிக்கப்பட்டாா். பெற்றோா் ஆசிரியா் கழக தலைவா் இ. வெங்கடேசன், துணைத் தலைவா் ராஜேஷ், பொருளாளா் ஜி. வெங்கடேசன், இணைச் செயலாளா் ஜெகனனாத், பள்ளி மேலாண்மைக்குழு தலைவா் ஆனந்தி, ஆசிரியா்கள் கலந்து கொண்டனா். உதவித் தலைமை ஆசிரியா் சந்திரசேகா் நன்றி கூறினாா்.