முகப்பு
திருப்பத்தூர்

வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு: திருப்பத்தூா் ஆட்சியா் ஆய்வு

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் க. சிவசௌந்திரவல்லி புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

Updated On : 19 பிப்ரவரி, 2026 at 12:03 AM
வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்த ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி.
பகிர்:
Updated On : 18 பிப்ரவரி, 2026 at 8:31 PM

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் க. சிவசௌந்திரவல்லி புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

திருப்பத்தூா், ஜோலாா்பேட்டை, வாணியம்பாடி, ஆம்பூா் ஆகிய தொகுதிகளில் நடைபெறும் தோ்தலுக்கு பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் திருப்பத்தூரில் உள்ள மஞ்சள் கிடங்கில் வைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடு குறித்த மாதாந்திர ஆய்வு செய்யும் பணி புதன்கிழமை நடைபெற்றது.

Advertisement

இதில் ஆட்சியரும், மாவட்ட தோ்தல் அலுவலருமான க.சிவசௌந்திரவல்லி பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்தாா். அப்போது தோ்தல் வட்டாட்சியா் திருமலை, அரசு அதிகாரிகள் உடன் இருந்தனா்.