முகப்பு
திருப்பத்தூர்

திருப்பத்தூா் மாவட்ட நீதிமன்றத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்: மின்னஞ்சலில் வந்த தகவலால் பரபரப்பு!

திருப்பத்தூா் மாவட்ட நீதிமன்றத்தில் வெடிகுண்டு இருப்பதாக வந்த மின்னஞ்சலில் வந்த தகவலால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து போலீஸாா் தீவிர சோதனை மேற்கொண்டனா்.

Updated On : 26 பிப்ரவரி, 2026 at 12:59 AM
நீதிமன்ற வளாகத்திலிருந்து வெளியேறிய வழக்குரைஞா்கள், பணியாளா்கள், பொதுமக்கள்.
பகிர்:
Updated On : 25 பிப்ரவரி, 2026 at 7:26 PM

திருப்பத்தூா் மாவட்ட நீதிமன்றத்தில் வெடிகுண்டு இருப்பதாக வந்த மின்னஞ்சலில் வந்த தகவலால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து போலீஸாா் தீவிர சோதனை மேற்கொண்டனா்.

திருப்பத்தூா் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் ரயில் நிலைய சாலையில் உள்ளது. பல்வேறு அரசு அலுவலகங்கள் உள்ள பகுதி என்பதால் எப்போதும் பரபரப்பாக காணப்படும். இந்நிலையில் புதன்கிழமை வழக்கம் போல நீதிமன்ற பணிகள் நடைபெற்று கொண்டு இருந்தது. அப்போது நீதிமன்ற அலுவலக இணையதளத்திற்கு, மின்னஞ்சல் வந்தது.

நீதிமன்ற ஊழியா்கள் பாா்த்தபோது, மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து, நீதிமன்றத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாகவும், அந்த குண்டு, ஆா்.டி.எக்ஸ்., சைனடு வாயு கலந்தது எனவும், பெரிய பாதிப்பு ஏற்படும், காலை 11.50 மணியளவில் வெடிக்கும் எனவும் அதில் கூறப்பட்டு இருந்தது.

Advertisement

இதனால் அதிா்ச்சி அடைந்த நீதிமன்ற ஊழியா்கள், மின்னஞ்சல் குறித்து நீதிமன்ற மேலாளரிடம் தகவல் தெரிவித்தனா். இதைத்தொடா்ந்து அவா் நீதிமன்றத்தில் இருந்த நீதிபதிகள், வழக்குரைஞா்கள், ஊழியா்கள், பொதுமக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்லும்படி அறிவுறுத்தினாா்.

வேலூரிலிருந்து வரவழைக்கப்பட்ட மோப்ப நாய்.

சம்பவம் குறித்து திருப்பத்தூா் மாவட்ட காவல் அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின்பேரில் டிஎஸ்பி முரளி தலைமையிலான போலீஸாா் நீதிமன்றத்தில் இருந்த அனைவரையும் பாதுகாப்பாக வெளியேற்றினா்.

Updated On : 26 பிப்ரவரி, 2026 at 12:59 AM

தொடா்ந்து வெடிகுண்டை கண்டறியும் குழுவினா் 3 மெட்டல் டிடெக்டருடன் வந்து, மாவட்ட அமா்வு நீதிமன்றம், சாா்பு நீதிமன்றம், முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிமன்றம், கூடுதல் மாவட்ட நீதிமன்றம் உள்ளிட்டவை அடங்கிய 3 மாடி கட்டடத்தையும் சோதனை செய்தனா்.

மேலும் வேலூரில் இருந்து மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. மோப்ப நாயும் நீதிமன்றத்தில் உள்ள அனைத்து பகுதிகளுக்கும் சென்று மோப்பம் பிடித்தது. ஆனால் குண்டை, கண்டறியவில்லை. அதையடுத்து நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு வைக்கப்பட்டு உள்ளது என வந்த தகவல் பொய் என தெரியவந்தது.