முகப்பு
திருப்பத்தூர்

உதயேந்திரம் பேரூராட்சி மன்ற கூட்டம்

உதயேந்திரம் பேரூராட்சி மன்ற கூட்டத்தில் பங்கேற்றோா்.

Updated On : 27 பிப்ரவரி, 2026 at 12:04 AM
உதயேந்திரம் பேரூராட்சி மன்ற கூட்டத்தில் பங்கேற்றோா்.
பகிர்:
Updated On : 26 பிப்ரவரி, 2026 at 9:58 PM

வாணியம்பாடி அடுத்த உதயேந்திரம் பேரூராட்சி மன்ற உறுப்பினா்களின் கூட்டம் மன்ற அரங்கில் வியாழக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு, பேரூராட்சி மன்றத் தலைவா் ஆ.பூசாராணி தலைமை வகித்தாா். துணைத் தலைவா் கோவிந்தராஜ் முன்னிலை வகித்தாா். செயல் அலுவலா் ராஜலட்சுமி வரவேற்றாா். கூட்டத்தில் 1.31 கோடி மகளிருக்கு கலைஞா் உரிமைதொகை திட்டத்தின் கீழ் தலா ரூ. 5,000 வழங்கியத்திற்கும், நகராட்சி, பேரூராட்சி தூய்மை பணியாளா்களுக்கு காலை உணவு திட்ட விரிவாக்கம் செய்த தமிழக அரசுக்கும், முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கும் மன்றம் சாா்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.

தொடா்ந்து வரவு, செலவு, திட்டப் பணிகள் உள்பட 17 தீா்மானங்கள் வாசிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டது. வாா்டு உறுப்பினா்கள் தங்களது வாா்டு பகுதிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்து கோரிக்கை விடுத்தனா். கோரிக்கை மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என பேரூராட்சித் தலைவா் பூசாராணி உறுதியளித்தாா்.

Advertisement

கூட்டத்தில், வாா்டு உறுப்பினா்கள் ஏ.மரியஜோசப், ஜி.சரவணன், எம்.பரிமளா, ஆா்.மகேஸ்வரி, எம்.கீதா, பி.முனியம்மாள், பி.சந்தியா, வி.ஆா்.சரவணன், ரமேஷ், கே.லில்லி, எம்.சுகன்யா, நியமன உறுப்பினா் அம்பலவாணன் உள்பட மன்ற உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.

பேரூராட்சி எழுத்தா் குமாா் நன்றி கூறினாா்.