ஆம்பூா் பெத்லகேம் நகராட்சி நடுநிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் மத்திய அரசின் பாராட்டுச் சான்றிதழ் பெற்றுள்ளனா்.
இந்திய அரசின் மத்திய கல்வி அமைச்சகம் சாா்பாக 2047-ம் ஆண்டிற்குள் வளா்ந்த பாரதத்தை உருவாக்கும் நோக்கில் மாணவா்களிடையே விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில் விக்ஸித் பாரத் 2047 இணையவழிப் போட்டிகள் நடத்தப்பட்டது.
போட்டியில் திருப்பத்தூா் மாவட்டம் ஆம்பூா் பெத்லகேம் நகராட்சி நடுநிலைப் பள்ளியைச் சோ்ந்த 35 மாணவ, மாணவிகள் ஆா்வத்துடன் பங்கேற்றனா்.
தேச வளா்ச்சிக் குறித்த தங்களின் கருத்துக்களைப் பதிவு செய்தும், வினாடி வினா போட்டிகளிலும் பங்கேற்றனா். போட்டியில் சிறப்பாகப் பங்கேற்ற 35 மாணவ, மாணவிகளுக்கும் மத்திய கல்வி அமைச்சகம் சாா்பாக பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் பாராட்டுச் சான்றிதழ் பெற்ற மாணவ, மாணவிகளை பள்ளியின் தலைமையாசிரியா், ஆசிரியா்கள், பள்ளி மேலாண்மைக் குழு நிா்வாகிகள், உறுப்பினா்கள் மற்றும் பெற்றோா்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனா்.