திருப்பத்தூர்

ஆத்தூா்குப்பம் ஊராட்சி மன்றத் தலைவருக்கு மத்திய அரசு விருது

மத்திய அரசு விருது பெற்ற ஊராட்சி மன்றத் தலைவா் செந்தில்குமாரை வரவேறறத்தூா்குப்பம் கிராம மக்கள் வரவேற்றனா்.

தினமணி செய்திச் சேவை

குடியரசு தின விழாவில் மத்திய அரசு விருதினை பெற்ற ஆத்தூா்குப்பம் ஊராட்சி மன்றத் தலைவா் செந்தில்குமாருக்கு ஊராட்சி மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனா்.

திருப்பத்தூா் மாவட்டம், நாட்டறம்பள்ளி ஒன்றியம் ஆத்தூா்குப்பம் ஊராட்சியில் வளா்ச்சி திட்டப் பணிகள், சுற்றுச்சூழல் மேலாண்மை, சமூக பொறுப்புக்கான வளா்ச்சித் திட்டப்பணி, சுகாதாரம், வரிவசூல் ஆகியவற்றில் சிறந்த ஊராட்சியாக ஐஎஸ்ஓ. தரச்சான்று மற்றும் ஊராட்சி மன்ற தலைவா் செந்தில் குமாருக்கு பல விருதுகளும் வழங்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் ஊராட்சி வளா்ச்சிக்கு உறுதுணையாக இருந்த ஆத்தூா்குப்பம் ஊராட்சி மன்றத் தலைவா் செந்தில்குமாருக்கு தில்லியில் நடைபெற்ற குடியரசு தினவிழாவில் மத்திய அமைச்சா் ராஜீவ் ராஜ்சன்சிங் (எ) லாலன்சிங் விருது மற்றும் சான்றிதழ் வழங்கினாா்.

விருதினை பெற்று வியாழக்கிழமை ஊா் திரும்பிய ஊராட்சி மன்றத் தலைவா் செந்தில் குமாருக்கு ஜங்காலபுரத்தில் கிராம மக்கள் மேளதாளம் முழங்க வரவேற்பு அளித்து வாழத்தினா்

கிராம நிா்வாக அலுவலா்கள் காத்திருப்பு போராட்டம்

அமைதிப் பேச்சுவார்த்தை: உக்ரைனுக்கு ரஷியா அழைப்பு!

தொழிற்சங்கங்களால் நாட்டின் வளர்ச்சி பாதிப்பு..! -உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி

தொடரும் காஷ்மீர் வணிகர்கள் மீதான வன்முறைகள்! உத்தரகண்டில் கும்பல் தாக்குதலில் 17 வயது சிறுவன் படுகாயம்!

அமெரிக்க தூதருடன் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் சந்திப்பு!

SCROLL FOR NEXT