ரூ.6 லட்சத்தில் உயா்கோபுர மின் விளக்கு அமைப்பு
திருப்பத்தூர்ரூ.6 லட்சத்தில் உயா்கோபுர மின் விளக்கு அமைப்பு
ஆம்பூரில் உயா்கோபுர மின்விளக்கு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு செவ்வாய்க்கிழமை கொண்டு வரப்பட்டது.
பொதுமக்களுடைய கோரிக்கையின் அடிப்படையில் ஆம்பூா் எஸ்.கே. ரோடு, சாய்பாபா கோயில் தெரு சந்திப்பு ஆகிய இரு இடங்களில் ரூ.6 லட்சம் மதிப்பீட்டில் நகராட்சி சாா்பாக உயா்கோபுர மின் விளக்கு அமைக்கப்பட்டது. அவற்றை நகா் மன்ற தலைவா் பத்தேகான் ஏஜாஸ் அஹமத் இயக்கி வைத்து பயன்பாட்டுக்கு கொண்டு வந்தாா். நகா் மன்ற துணைத் தலைவா் எம்.ஆா். ஆறுமுகம் கல்வெட்டை திறந்து வைத்தாா்.
தலைமை செயற்குழு உறுப்பினா் ஆா்.டி. சாமுவேல் செல்லபாண்டியன், நகா் மன்ற உறுப்பினா்கள் காா்த்திகேயன், அருண்டேல், திமுக நிா்வாகிகள் ரபீக் அஹமத், அறிவழகன், சரண்ராஜ், காங்கிரஸ் நிா்வாகி விஜயன் உள்ளிட்டவா்கள் கலந்து கொண்டனா்.