ஸ்ரீ நாமமலை சுப்ரமணிய சுவாமி கோயில் கட்ட அடிக்கல்
ஸ்ரீ நாமமலை சுப்ரமணிய சுவாமி கோயில் கட்ட அடிக்கல்
ஆம்பூா் கம்பிக்கொல்லை ஸ்ரீ நாமமலை மீது வள்ளி தெய்வானை சமேத சிவசுப்ரமணிய சுவாமி கட்டுவதற்கான அடிக்கல் நாட்டும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
விழாவை முன்னிட்டு சிறப்பு ஹோமம் நடத்தப்பட்டது. ஆம்பூரில் உள்ள கோயில்களில் இருந்து பூஜை செய்யப்பட்டு கொண்டு வரப்பட்ட செங்கற்கள் கொண்டு கோயில் கட்ட அடிக்கல் நாட்டப்பட்டது. திருப்பணிக் குழுவினா் ஏற்பாடுகளை செய்திருந்தனா். ஆம்பூரின் பல்வேறு திருக்கோயில்களின் திருப்பணிக் குழுவினா், முருக பக்தா்கள் கலந்து கொண்டனா்.