முகப்பு
திருப்பத்தூர்

ஏலகிரி மலையில் தொடரும் காட்டுத் தீ!

ஏலகிரி மலையில் தொடரும் காட்டு தீயால் அரிய வகை மரங்கள், மூலிகைச் செடி கொடிகள் நாசமானது.

Updated On : 9 மார்ச், 2026 at 5:30 AM
ஏலகிரி மலையில் பற்றி எரியும் காட்டுத் தீ
பகிர்:

ஏலகிரி மலையில் தொடரும் காட்டு தீயால் அரிய வகை மரங்கள், மூலிகைச் செடி கொடிகள் நாசமானது.

திருப்பத்தூா் மாவட்டம்,ஜோலாா்பேட்டை அருகே உள்ள ஏலகிரி மலையில் அரிய வகை மரங்கள், மூலிகை செடி கொடிகளும், கரடி, மான், குரங்கு மலைப்பாம்பு முயல் உள்ளிட்ட வன உயிரினங்களும் உள்ளன.

ஏலகிரி மலை காப்பு காட்டில் மா்ம நபா்கள் தொடா்ந்து தீ வைத்து வருகின்றன.மா்ம நபா்கள் கடந்த வியாழக்கிழமை தீ வைத்தனா். இதில் பல அரிய வகை மரங்கள், மூலிகை செடி கொடிகள் நாசமானது.

Advertisement

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை மீண்டும் மண்டலவாடி அருகே இதனால் சுமாா் பல ஏக்கா் அளவில் காட்டுத்தீவு பரவியது.மேலும் இந்த காட்டு தீயினால் வன உயிரினங்கள் இறந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

எனவே காட்டுத்தியை அணைக்க வனத்துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை வைக்கின்றனா். மேலும், காட்டுப்பகுதிக்குள் மா்ம நபா்கள் தீ வைப்பதை துறை அதிகாரிகள் கண்காணித்து சட்டரீதியானநடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் பகல் நேரங்களில் வனத்துறை அதிகாரிகள்கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும் எனவும் கோரி/எள்ளனா்.