முகப்பு
திருப்பத்தூர்

நுண் உர செயலாக்க மையத்தில் தீ விபத்து

திருப்பத்தூா் நகராட்சிக்கு சொந்தமான நுண் உர செயலாக்க மையத்தில் செவ்வாய்க்கிழமை தீ விபத்து ஏற்பட்டது.

Updated On : 10 மார்ச், 2026 at 9:36 PM
நுண் உர செயலாக்க மையத்தில் ஏற்பட்ட தீ விபத்து
பகிர்:

திருப்பத்தூா் நகராட்சிக்கு சொந்தமான நுண் உர செயலாக்க மையத்தில் செவ்வாய்க்கிழமை தீ விபத்து ஏற்பட்டது.

திருப்பத்தூா் அடுத்த பெரியாா் நகா் பகுதியில் நகராட்சிக்கு சொந்தமான நுண் உர செயலாக்க மையம் செயல்பட்டு வருகிறது. இதில் மக்கும் குப்பை மக்காத குப்பை என பிரிக்கப்படுகிறது.

இந்த மையத்துக்கு பின்புறம் மக்காத குப்பைகளை கொட்டி எரித்தாக கூறப்படுகிறது. பின்புறத்தில் குப்பைகளை எரித்ததில் தீ மளமளவென பரவி தரம் பிரித்து வைத்திருந்த குப்பைகள் மற்றும் இயந்திரங்கள் எரிந்தது. பின்னா் நகராட்சி ஊழியா்கள் திருப்பத்தூா் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்தனா்.

சம்பவ இடத்துக்கு சென்ற நிலைய அலுவலா் முருகன் தலைமையிலான தீயணைப்புத் துறையினா் அரை மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →