தெலங்கானா: தனியார் பேருந்தில் திடீர் தீ விபத்து
தெலங்கானாவில் தனியார் பேருந்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தெலங்கானாவில் தனியார் பேருந்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தெலங்கானா மாநிலம், மேடக்கிலிருந்து ஹைதராபாத் நோக்கி திங்கள்கிழமை அதிகாலை சென்று கொண்டிருந்த தனியார் பேருந்தில் தீ விபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்து அங்கு விரைந்த தீயணைப்பு வாகனகம் தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தது. இந்தச் சம்பவத்தில் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை.
இதுகுறித்து தீயணைப்புத் துறை அதிகாரி கூறுகையில், "மேடக்கிலிருந்து ஹைதராபாத் நோக்கிச் சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து, இன்று அதிகாலை மேடக் மாவட்டத்தின் மசாய்பேட்டில் தீப்பிடித்தது. பழுதுபார்ப்பதற்காக ஹைதராபாத் சென்று கொண்டிருந்த அந்தப் பேருந்தில் ஓட்டுநர் மற்றும் மற்றொரு நபர் மட்டுமே இருந்தனர்.
Advertisement
தீயைக் கண்டதும் அவர்கள் உடனடியாகக் கீழே இறங்கினர். மேலும் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை. தீயணைப்பு வாகனம் சம்பவ இடத்திற்கு வந்து தீயைக் கட்டுக்குள் கொண்டுவந்தது. தீ விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை," என்று தெரிவித்தார்.