முகப்பு
இந்தியா

தெலங்கானா: தனியார் பேருந்தில் திடீர் தீ விபத்து

தெலங்கானாவில் தனியார் பேருந்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Updated On : 27 ஏப்ரல் 2026, 10:27 am IST
தீ விபத்து ஏற்பட்ட பேருந்து. - ANI
பகிர்:

தெலங்கானாவில் தனியார் பேருந்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தெலங்கானா மாநிலம், மேடக்கிலிருந்து ஹைதராபாத் நோக்கி திங்கள்கிழமை அதிகாலை சென்று கொண்டிருந்த தனியார் பேருந்தில் தீ விபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்து அங்கு விரைந்த தீயணைப்புத் துறையினர் தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்தச் சம்பவத்தில் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை.

இதுகுறித்து தீயணைப்புத் துறை அதிகாரி கூறுகையில், "மேடக்கிலிருந்து ஹைதராபாத் நோக்கிச் சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து, இன்று அதிகாலை மேடக் மாவட்டத்தின் மசாய்பேட்டில் தீப்பிடித்தது. பழுதுபார்ப்பதற்காக ஹைதராபாத் சென்று கொண்டிருந்த அந்தப் பேருந்தில் ஓட்டுநர் மற்றும் மற்றொரு நபர் மட்டுமே இருந்தனர்.

Advertisement

Advertisement

தீயைக் கண்டதும் அவர்கள் உடனடியாகக் கீழே இறங்கினர். மேலும் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை. தீயணைப்பு வாகனம் சம்பவ இடத்திற்கு வந்து தீயைக் கட்டுக்குள் கொண்டுவந்தது. தீ விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை," என்று தெரிவித்தார்.

summary

A private bus travelling from Medak to Hyderabad caught fire in the early hours of Monday, officials said.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments