சென்னையில் தனியார் ஐடி நிறுவனத்தில் தீ விபத்து!
சென்னையில் தனியார் ஐடி நிறுவனத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது பற்றி...
சென்னையில் ஓஎம்ஆர் சாலையில், சோழிங்கநல்லூர் அடுத்த காரப்பாக்கத்தில் உள்ள தனியார் ஐடி நிறுவனத்தில் பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
தீ விபத்தையடுத்து நிறுவனத்தில் பணியாற்றிய ஊழியர்கள் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.
கட்டடம் முழுவதும் தீ பற்றி எரிந்து வருகிறது. தகவலறிந்த தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
Advertisement
தீ விபத்து காரணமாக காரப்பாக்கம் பகுதியில் கரும்புகை சூழ்ந்துள்ளது.
காவல்துறையினரும் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பாதிப்பு குறித்து இதுவரை எந்த தகவலும் இல்லை.
summary