சென்னையில் இருந்து புறப்பட்ட விமானம் அவசரமாக நிறுத்தம்! தீ விபத்தா?
சென்னையில் இருந்து புறப்பட்ட விமானம் அவசரமாக நிறுத்தப்பட்டது பற்றி...
சென்னையில் இருந்து அபுதாபிக்கு புறப்பட்ட விமானம் இன்று காலை அவசரமாக ஓடுபாதையிலேயே நிறுத்தப்பட்டது.
சென்னையில் இருந்து அபுதாபிக்கு இன்று காலை 10.15 மணியளவில் புறப்பட்ட எத்தியாட் விமானம் (இஒய்0343) அவசரமாக ஓடுபாதையிலேயே நிறுத்தப்பட்டு, மீண்டும் நுழைவு வாயிலுக்கு கொண்டு வரப்பட்டது.
இந்த விமானத்தில் 228 பயணிகள் உள்பட 238 பேர் பயணம் மேற்கொள்ள இருந்த நிலையில், விமானத்தின் இறக்கைப் பகுதியில் தீ விபத்து ஏற்பட்டதால் அவசரமாக நிறுத்தப்பட்டதாக தகவல்கள் பரவின.
Advertisement
Advertisement
இந்த நிலையில், தீ விபத்து ஏற்பட்டதாக வெளியான தகவலை மறுத்து எத்தியாட் விமான நிறுவனம் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
ஹைட்ராலிக் தொழில்நுட்பத்தின் பிரச்னை ஏற்பட்டது விமானம் புறப்படுவதற்கு முன்னதாகவே கண்டறியப்பட்டதால் அவசரமாக நிறுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கோளாறு சரிசெய்யப்பட்டு 5 மணிநேரம் தாமதமாக விமானம் அபுதாபிக்குப் புறப்பட்டுச் சென்றதாகவும், பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Flight Departing from Chennai Makes Emergency Stop! Was It a Fire?
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.