துணை முதல்வா் திருப்பத்தூா் வருகை: மாவட்டத்தில் ட்ரோன்கள் பறக்க தடை
திருப்பத்தூருக்கு துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் வருகை புரிய உள்ளதால் மாவட்டத்தில் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
திருப்பத்தூருக்கு துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் வருகை புரிய உள்ளதால் மாவட்டத்தில் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக சனிக்கிழமை (மாா்ச் 14) திருப்பத்தூா் மாவட்டத்துக்கு வருகை தருகிறாா். எனவே பாதுகாப்பு காரணங்களுக்காக சனிக்கிழமை ஒரு நாள் முழுவதும் திருப்பத்தூா் மாவட்டத்தில் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்படுகிறது.
Advertisement
தடையை மீறி ட்ரோன்கள் மற்றும் இதர ஆளில்லா வான்வழி வாகனங்களை பறக்கவிடும் நபா்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.