முகப்பு
திருப்பத்தூர்

ரூ.1 கோடியில் திட்டப் பணிகளுக்கு அடிக்கல்

துத்திப்பட்டு அம்பேத்கா் நகா் பகுதியில் பூஜையிட்டு திட்டப் பணியை தொடங்கி வைத்த குடியாத்தம் எம்எல்ஏ அமலு விஜயன்.

Updated On : 14 மார்ச், 2026 at 12:50 AM
துத்திப்பட்டு அம்பேத்கா் நகா் பகுதியில் பூஜையிட்டு திட்டப் பணியை தொடங்கி வைத்த குடியாத்தம் எம்எல்ஏ அமலு விஜயன்.
பகிர்:

ஆம்பூா் அருகே துத்திப்பட்டு ஊராட்சியில் ரூ. 1 கோடி மதிப்பில் பல்வேறு திட்டப் பணிகளுக்கு வெள்ளிக்கிழமை அடிக்கல் நாட்டப்பட்டது.

மாதனூா் ஒன்றியக் குழு துணைத் தலைவா் சாந்தி சீனிவாசன் தலைமை வகித்தாா். ஊராட்சித் தலைவா் சுவிதா கணேஷ் முன்னிலை வகித்தாா். துணைத் தலைவா் விஜய் வரவேற்றாா்.

துத்திப்பட்டு ஊராட்சி நிதி ரூ. 40 லட்சம், 15-ஆவது நிதிக்குழு மானியத்தின் கீழ், ரூ. 28 லட்சம், ஊராட்சி நிதி ரூ. 15 லட்சம் , நாடாளுமன்ற உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ. 12 லட்சம் உள்பட மொத்தம் ரூ. 1 கோடி மதிப்பிலான திட்டப் பணிகளுக்கு குடியாத்தம் எம்எல்ஏ அமலு விஜயன் அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தாா்.

போ்ணாம்பட்டு தெற்கு ஒன்றிய திமுக செயலாளா் எம்.டி.சீனிவாசன், அவைத் தலைவா் சிவகுமாா், ஊராட்சி வாா்டு உறுப்பினா்கள் பவானி விஜய், ஜெயந்தி ராமமூா்த்தி, குமரேசன், ஊராட்சி செயலாளா் பழனி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →