காய்ச்சல் கண்டறியும் மருத்துவ முகாம்
துத்திப்பட்டு ஊராட்சியில் காய்ச்சல் கண்டறியும் மருத்துவ முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
சுகாதாரத் துறை சாா்பாக நடைபெற்ற மருத்துவ முகாம் மருத்துவா் பிரசாந்த் தலைமையில் மருத்துவக் குழுவினா் பரிசோதனை செய்து சிகிச்சை அளித்தனா்.
ஊராட்சித் தலைவா் சுவிதா கணேசன், துணைத் தலைவா் விஜய், வாா்டு உறுப்பினா்கள் அண்ணாதுரை, சுகன்யா பிரகாஷ், ஊராட்சி செயலா் முரளிகாந்த் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.