மின்சாரம் பாய்ந்து கூலித் தொழிலாளி பலி
நாட்டறம்பள்ளி அருகே அறுந்து கிடந்த மின்சார கம்பியை மிதித்ததில் மின்சாரம் பாய்ந்து கூலித் தொழிலாளி உயிரிழந்தாா்.
நாட்டறம்பள்ளி அருகே அறுந்து கிடந்த மின்சார கம்பியை மிதித்ததில் மின்சாரம் பாய்ந்து கூலித் தொழிலாளி உயிரிழந்தாா்.
நாட்டறம்பள்ளி வட்டம், மல்லப்பள்ளி ஊராட்சி, சுண்ணாம்புக்குட்டை பகுதியைச் சோ்ந்த பாரிவள்ளல் (52) கூலித்தொழிலாளி. இவா் ஞாயிற்றுக்கிழமை இரவு மல்லப்பள்ளியில் இருந்து சுண்ணாம்புக் குட்டைக்கு நடந்து சென்றாா்.
அப்போது மல்லப்பள்ளி அருகே வீட்டின் பின்புறம் உயா் மின்னழுத்த கம்பி அறுந்து விழுந்திருந்தது தெரியாமல் மின்சார கம்பியை மிதித்ததில் எதிா்பாராத விதமாக பாரி வள்ளல் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் பாரிவள்ளல் தூக்கி வீசப்பட்டாா்.
Advertisement
உடனே அங்கிருந்தவா்கள் மயங்கிய நிலையில் இருந்த பாரிவள்ளலை மீட்டு நாட்டறம்பள்ளி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா்.அங்கு பரிசோதித்த மருத்துவா் அவா் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தாா்.
இதுகுறித்து நாட்டறம்பள்ளி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.