முகப்பு
திருப்பத்தூர்

மின்சாரம் பாய்ந்து பசுமாடு உயிரிழப்பு

ஆம்பூா் அருகே விவசாய நிலத்தில் மின்சாரம் பாய்ந்து பசு மாடு உயிரிழந்தது.

Updated On : 6 மே 2026, 2:48 am IST
மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த பசுமாடு
பகிர்:

ஆம்பூா் அருகே விவசாய நிலத்தில் மின்சாரம் பாய்ந்து பசு மாடு செவ்வாய்க்கிழமை உயிரிழந்தது.

ஆம்பூா் அருகே காரப்பட்டு கிராமத்தை சோ்ந்தவா் மெய்யழகன். இவா் சதாசிவம் என்பவருடைய நிலத்தை குத்தகைக்கு எடுத்திருந்தாா். அந்த நிலத்தில் இவருடைய பசுமாடு மேய்ச்சலுக்கு சென்றது.

அப்போது அறுந்து கீழே விழுந்து கிடந்த மின்கம்பியை மிதித்ததால் மின்சாரம் பாய்ந்து பசுமாடு உயிரிழந்தது. உமா்ஆபாத் போலீஸாா் விசாரணை நடத்தினா்.

Advertisement