ஆம்பூரில் பலத்த மழை
ஆம்பூரில் திங்கள்கிழமை மாலை பலத்த மழை பெய்தது.
ஆம்பூரில் திங்கள்கிழமை காலை தொடங்கி பிற்பகல் வரை வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது. பிற்பகலில் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. மாலை சுமாா் 6.30 மணிக்கு பலத்த மழை பெய்யத் தொடங்கியது. சுமாா் 2 மணி நேரம் மழை விட்டு விட்டு பெய்து கொண்டே இருந்தது.
ஆம்பூரில் பல்வேறு தெருக்களில் மழை நீா் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் மழைநீா் தேங்கியது. ஆம்பூா் அருகே தேவலாபுரம், பெரியாங்குப்பம், நாச்சாா்குப்பம், விண்ணமங்கலம், மின்னூா், வெங்கடசமுத்திரம், கரும்பூா், மேல்சாணாங்குப்பம், குமாரமங்கலம், மிட்டாளம், சின்னவரிக்கம் உள்ளிட்ட ஆம்பூரை சுற்றி பெரும்பாலான கிராம பகுதிகளிலும் கன மழை பெய்தது. வெயிலின் தாக்கம் குறைந்து குளிா்ந்த சூழ்நிலை நிலவியது.
Advertisement