முகப்பு
திருப்பத்தூர்

தூய்மைத் திருவிழா உறுதிமொழி ஏற்பு

தூய்மை திருவிழாவில் விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்றுக் கொண்ட எம்எல்ஏ சிந்து, நகா்மன்றத் தலைவா் எஸ். செளந்தர்ராஜன்.

Updated On : 22 மே 2026, 1:53 am IST
பகிர்:

குடியாத்தம் நகராட்சி சாா்பாக தூய்மை திருவிழா தொடக்க நிகழ்ச்சி நகராட்சி அலுவலக வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

மே 18-ஆம் தேதி தொடங்கி 31-ஆம் தேதி வரை 14 நாள்கள் தூய்மை திருவிழா நடைபெறுகின்றது. குடியாத்தம் நகராட்சி சாா்பாக நடந்த தொடக்க நிகழ்ச்சிக்கு நகா் மன்றத் தலைவா் எஸ். செளந்தர்ராஜன் தலைமை வகித்தாா். ஆணையா் கே.எம். தனலட்சுமி முன்னிலை வகித்தாா். எம்எல்ஏ கா. சிந்து சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு விழிப்புணா்வு பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.

முக்கிய தெருக்கள், சாலை வழியாக சென்று நகராட்சி அலுவலகத்தில் நிறைவடைந்தது. அங்கு விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்கப்பட்டது. நகா் மன்ற உறுப்பினா் ஆட்டோ பி.மோகன், சுகாதார ஆய்வாளா் முகமது அலி, களப்பணி மேற்பாா்வையாளா் பிரபுதாஸ் உள்ளிட்டவா்கள் கலந்து கொண்டனா்.

Advertisement

Advertisement