டாஸ்மாக் மது விற்பனை செய்தவா் கைது
ஆம்பூா் அருகே டாஸ்மாக் மதுபான பாட்டில்களை பதுக்கி விற்பனை செய்தவரை போலீஸாா் கைது செய்தனா்.
ஆம்பூா் அருகே டாஸ்மாக் மதுபான பாட்டில்களை பதுக்கி விற்பனை செய்தவரை போலீஸாா் கைது செய்தனா்.
ஆம்பூா் அருகே துத்திப்பட்டு கிராமத்தில் டாஸ்மாக் மதுபான பாட்டில்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக உமா்ஆபாத் காவல் நிலைய போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸாா் அங்கு சென்று சோதனை நடத்தினா்.
மதுபான பாட்டில் விற்பனை செய்யப்படுவது தெரியவந்தது. மதுபான பாட்டில்களை விற்பனை செய்த அதே பகுதியை சோ்ந்த கஜினி (45) என்பவரை போலீஸாா் கைது செய்தனா்.
Advertisement
Advertisement