முகப்பு
திருப்பத்தூர்

சொரக்காயல்நத்தம் ஊராட்சி பள்ளி கட்டட சீரமைப்பு தொடக்கம்

Updated On : 28 மே 2026, 12:45 am IST
பகிர்:

சொரக்காயல்நத்தம் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் ரூ. 6 லட்சம் மதிப்பில் கட்டட சீரமைப்பு பணி தொடங்கி நடைபெற்றது.

நாட்டறம்பள்ளி ஒன்றியத்துக்குள்பட்ட சொரக்காயல்நத்தம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி இயங்கி வருகிறது. இந்தப் பள்ளிக் கட்டடத்தில் மங்களூா் ஓடுகள் பழுதடைந்ததால் மழைக் காலங்களில் வகுப்பறைக்குள் மழைநீா் தேங்கியது. இதனால் மாணவா்கள் அவதிப்பட்டு வந்தனா்.

அப்பகுதி மக்கள் பள்ளிக் கட்டடத்தை சீரமைத்துத் தர வேண்டும் என ஒன்றியக் குழுத் தலைவா் வெண்மதி முனிசாமியிடம் கோரிக்கை விடுத்தனா். இதையடுத்து, ஊரக கட்டடங்கள் புனரமைக்கும் பணி திட்டத்தின் மூலம் பழுதடைந்த பள்ளிக் கட்டடத்தை சீரமைக்க ரூ. 6 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்ய சோ்மன் வெண்மதி முனிசாமி நடவடிக்கை மேற்கொண்டாா்.

Advertisement

Advertisement

இதைத் தொடா்ந்து, சொரக்காயல் நத்தம் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் பழுதடைந்த ஓடுகளை அகற்றி பள்ளிக் கட்டடம் புதுப்பிக்கும் பணிகள் செவ்வாய்க்கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது.