வேல்டெக் கல்லூரி பட்டமளிப்பு விழா:ஆளுநர் ரோசய்யா பங்கேற்பு
ஆவடி வேல்டெக் கல்லூரியின் 15-வது பட்டமளிப்பு விழா மற்றும் நிறுவனத் தலைவர் ரங்கராஜனின் சுயசரிதைப் புத்தக வெளியீட்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
ஆவடி வேல்டெக் கல்லூரியின் 15-வது பட்டமளிப்பு விழா மற்றும் நிறுவனத் தலைவர் ரங்கராஜனின் சுயசரிதைப் புத்தக வெளியீட்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
விழாவில் கல்லூரியின் துணைத்தலைவர் சகுந்தரா ரங்கராஜன், அறங்காவலர் குழுத் தலைவர் ரங்கராஜன் மகாலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
வேல்டெக் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ஆர்.பி.பாஜ்பாய் வரவேற்றார்.
Advertisement
Advertisement
விழாவில் சிறப்பு அழைப்பாளராக தமிழக ஆளுநர் ரோசய்யா பங்கேற்று ரங்கராஜனின் சுயசரிதை புத்தகத்தை வெளி
யிட்டார்.
இதனைத்தொடர்ந்து, அண்ணா பல்கலைக்கழகத் தேர்வில் சிறந்து விளங்கிய 17 மாணவர்களுக்கு தங்கப்பதக்கங்களும், 550 மாணவர்களுக்கு பட்டங்களையும் அவர் வழங்கினார்.
மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவராவ் மற்றும் கல்லூரி நிர்வாகிகள் உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர்.