திருவள்ளூர்

மரம் வளர்ப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி: நடிகர் ஆர்.பாண்டியராஜன் பங்கேற்பு

DIN

செய்யாறு டெம்பிள் சிட்டி ரோட்டரி சங்கம் சார்பில், மரம் வளர்ப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
செய்யாறில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு சங்கத்தின் தலைவர் கே.ஏ.சந்தானகிருஷ்ணன் தலைமை வகித்தார். நிகழ்ச்சியின்போது, கோ கிரீன் தலைவர் எஸ்.ஏ.அன்வர்பெய்க் முன்னிலையில், 101 மரக்கன்றுகளை திரைப்பட நடிகரும், இயக்குநருமான ஆர்.பாண்டியராஜன், விழாவில் பங்கேற்றோருக்கு வழங்கினார். மேலும், மரங்களை வளர்ப்பதால் மனிதர்களுக்கும், நாட்டுக்கும் கிடைக்கும் நன்மைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் ரோட்டரி செயலர் எஸ்.கருப்பையா, முன்னாள் தலைவர் பி.எஸ்.ஏகாம்பரம் மற்றும் ரோட்டரி உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர். முன்னதாக சிரிக்கலாம் வாங்க நிகழ்ச்சி நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் எங்கு அதிகபட்ச வெப்பநிலை? - தமிழ்நாடு வெதர்மேன் பதிவு!

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நாளை சித்திரைத் தேரோட்டம்!

ஓடிடியில் மஞ்ஞுமல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

SCROLL FOR NEXT