திருவள்ளூர்

நவோதயா பள்ளிகளை ஏற்படுத்தக் கோரி பாஜகவினர் ஆர்ப்பாட்டம்

DIN

திருவள்ளூரை அடுத்த வேப்பம்பட்டு ரயில் நிலையம் அருகே பாஜக இளைஞரணியினர் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தமிழகத்தில் நவயோதயா பள்ளிகளை ஏற்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு பாஜக மாவட்ட இளைஞரணித் தலைவர் ஆர்யா சீனிவாசன் தலைமை வகித்தார். மாநில செயலாளர் கரு.நாகராஜன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார்.
இதில், தமிழகத்தில் நவோதயா பள்ளிகளை உடனே திறக்க வலியுறுத்தியும், கல்விக் கொள்கையில் திமுகவின் போக்கை கண்டித்தும் முழக்கங்களை எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட செயலாளர்கள் பாலாஜி, கருணாகரன், பொதுச் செயலாளர் ராஜ்குமார், திருவள்ளூர் நகரத் தலைவர் ரகுராமன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிலிண்டர் வெடித்ததில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் மருத்துவமனையில் அனுமதி!

உதகையில் 73 ஆண்டுகளில் பதிவான 84.2 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம்!

காங்கிரஸ் கட்சிக்கு மறதியா? ராஜ்நாத் சிங்

ருதுராஜ், டேரில் மிட்செல் அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 213 ரன்கள் இலக்கு!

வெள்ளியங்கிரி மலை ஏறிய பக்தர் ஒருவர் பலி: இந்த ஆண்டு இதுவரை 9 பேர் பலி

SCROLL FOR NEXT