முகப்பு
திருவள்ளூர்

ஆவடி தாலுகாவில் நாளை குறைதீர் முகாம்

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி தாலுகா சார்பாக பட்டாபிராம் தண்டுரை கிராமத்தில் மக்கள் குறைதீர் முகாம் புதன்கிழமை (ஏப்ரல் 11) நடைபெறவுள்ளது.

Updated On : 10 ஏப்ரல், 2018 at 4:16 AM
பகிர்:

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி தாலுகா சார்பாக பட்டாபிராம் தண்டுரை கிராமத்தில் மக்கள் குறைதீர் முகாம் புதன்கிழமை (ஏப்ரல் 11) நடைபெறவுள்ளது.
காலை 10 மணிக்கு தொடங்கும் இந்நிகழ்ச்சியில் தமிழ் வளர்ச்சி மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் க.பாண்டியராஜன், ஆட்சியர் எ.சுந்தரவல்லி மற்றும் அனைத்து துறைத் தலைவர்களும் கலந்துகொள்கின்றனர். 
பொதுமக்கள், பட்டா, சிட்டா, ஜாதிச் சான்றிதழ், வருவாய்ச் சான்றிதழ், முதியோர் உதவித்தொகை, திருமண உதவித்தொகை, குடும்ப அட்டை, சாலை வசதி, குடிநீர் வசதி, தெருவிளக்கு பிரச்னை உள்ளிட்ட தேவைகள் குறித்து மாவட்ட ஆட்சியரிடம் தெரிவிக்கலாம். பொது மக்கள் கொடுக்கும் மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று வட்டாட்சியர் மதன் குப்புராஜ் தெரிவித்தார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.