அதிமுக ஆலோசனைக் கூட்டம்: அமைச்சர்கள் பங்கேற்பு
திருவள்ளூரில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடுவது தொடர்பாக புதன்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர்கள் பங்கேற்றனர்.
திருவள்ளூரில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடுவது தொடர்பாக புதன்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர்கள் பங்கேற்றனர்.
திருவள்ளூரில் உள்ள தனியார் அரங்கத்தில் நடைபெற்ற கூட்டத்திற்கு பொன்னேரி எம்எல்ஏ சிறுணியம் பலராமன் தலைமை வகித்தார். மாவட்ட அவைத் தலைவர் கண்ணப்பன் முன்னிலை வகித்தார். இதில் , ஊரக தொழில் துறை அமைச்சர் பெஞ்சமின், தமிழ் வளர்ச்சி மற்றும் தொல்பொருள் துறை அமைச்சர் க.பாண்டியராஜன் ஆகியோர் பேசினர்.
கூட்டத்தில் கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ விஜயகுமார், திருத்தணி எம்எல்ஏ நரசிம்மன், எம்.ஜி.ஆர் இளைஞர் மன்ற மாநில நிர்வாகி சம்பத்குமார், முன்னாள் நகராட்சித் தலைவர் கமாண்டோ பாஸ்கர், ஒன்றியச் செயலாளர் புட்லூர் சந்திரசேகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நகரச் செயலாளர் கந்தசாமி நன்றி கூறினார்.