பெண்ணிடம் 7 பவுன் நகை பறிப்பு
திருவள்ளூர் அருகே நடந்து சென்ற பெண்ணிடம் 7 பவுன் நகையை மர்ம நபர்கள் பறித்துச் சென்றனர்.
திருவள்ளூர் அருகே நடந்து சென்ற பெண்ணிடம் 7 பவுன் நகையை மர்ம நபர்கள் பறித்துச் சென்றனர்.
திருவள்ளூர் அருகே கூடப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த முருகனின் மனைவி தேவி (46). இவர், செவ்வாய்க்கிழமை கூடப்பாக்கம் பேருந்து நிறுத்தம் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, பின்னால் பைக்கில் வந்த 3 இளைஞர்கள் தேவியின் கழுத்தில் கிடந்த 7 பவுன் நகையை பறித்துச் சென்றனர். இதுகுறித்த புகாரின் பேரில் வெள்ளவேடு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.